கொழும்பு
வங்கதேசத்தின் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு பயிற்சி கப்பல்கள், இன்று கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்தது.
சோமுத்ர விஜான், சோமுத்ர ஜோய் என்ற இந்த இரண்டு கப்பல்களில் 511 சிப்பாய்கள் மற்றும் அதிகாரிகள் வந்துள்ளனர்.
கொழும்பு துறைமுகத்தில் கலாச்சார பணிகள், கடல் சுத்தப்படுத்துதல், விளையாட்டு செயற்பாடுகளில் ஈடுபட உள்ளதாக தெரிகிறது.
மேலும் இந்த பயிற்சிக் கப்பல் வரும் அக்டோபர் 4 ம் தேதி வங்கதேசம் திரும்பிச் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.