பெண்களின் தற்காப்புக்கு மிளகாய்த் தூள் "ஸ்பிரே' : தில்லியில் அறிமுகம்

பாலியல் பலாத்காரம், செயின் பறிப்பு போன்ற குற்றச் செயல்களிலிருந்து பெண்கள் தங்களை தற்காத்து கொள்ள வசதியாக, மிளகாய்த் தூளை கொண்டு
பெண்களின் தற்காப்புக்கு மிளகாய்த் தூள் "ஸ்பிரே' : தில்லியில் அறிமுகம்

பாலியல் பலாத்காரம், செயின் பறிப்பு போன்ற குற்றச் செயல்களிலிருந்து பெண்கள் தங்களை தற்காத்து கொள்ள வசதியாக, மிளகாய்த் தூளை கொண்டு எளிதில் தயாரிக்கக்கூடிய பிரத்யேக தெளிப்பானை தன்னார்வ அமைப்பு தில்லியில் அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்றைய காலசூழலில் பணிக்குச் செல்லும் பெண்கள், வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் என அனைத்து தரப்பு பெண்களும் பாலியல் பலாத்காரம், கொலை, திருட்டு போன்ற குற்றச்செயல்களுக்கு ஆளாகின்றனர். இதுபோன்ற சமூக விரோத செயல்களிலிருந்து பெண்கள் தங்களை தற்காத்து கொள்ள பல்வேறு வழிமுறைகள் இருந்தாலும், எளிய உபாயமாக மிளகு, மிளகாய் பொடி போன்றவற்றாலான தெளிப்பான்களை பெண்கள் தங்களது கைப்பையில் எப்போதும் வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது. இத்தகைய தெளிப்பான்கள் சந்தையில் ரூ.170 முதல் ரூ.400 வரை கிடைக்கிறது.

இந்த நிலையில், தில்லியைச் சேர்ந்த "மிர்ச்சி ஜோனக்' எனும் தன்னார்வ அமைப்பு ரூ.25 செலவில் மிளகாய்ப் பொடியை கொண்டு வீட்டிலேயே எளிதில் தயாரிக்கக்கூடிய தெளிப்பானை தில்லியில் அண்மையில் அறிமுகப்படுத்தியது.

இதுகுறித்து இந்த அமைப்பின் நிறுவனர் சீமா மாலிக் கூறியதாவது:

பெண்கள் மத்தியில் தற்காப்பு உணர்வை ஊக்குவிக்கும் எங்களது பல்வேறு முயற்சிகளின் சிறு பகுதியாக இந்த தெளிப்பானை அறிமுகப்படுத்தியுள்ளோம்; மேலும் இதன் தயாரிப்பு முறைகள் குறித்த விவரங்களையும் வழங்கியுள்ளோம். விருப்பமுள்ள தில்லிவாழ் பெண்களுக்கு இதனை இலவசமாக வழங்கி வருகிறோம். மிளகாய்ப் பொடியிலான இந்த தெளிப்பானை நாடு முழுவதும் பிரபலப்படுத்தி, அதன் மூலம் நகரம், கிராமம் என அனைத்துப் பகுதி பெண்களும் பயன்பெற வேண்டும் என்பதே எங்களது முக்கிய நோக்கமாகும் என்று சீமா மாலிக் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com