பா.ஜ.க. எம்.பி மகேஷ் சர்மா தனது மகள் திருமணத்தை 2.5 லட்சம் ரூபாய் செலவில் முடித்தாரா என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்ததை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் தில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பேசிய கேஜ்ரிவால் பாரதீய ஜனதா எம்.பி மகேஷ் சர்மாவின் மகள் திருமணம் அண்மையில் நடைபெற்றுது.
அவர் அனைத்து செலவுகளுக்கும் காசோலை வழங்கினாரா? 2.5 லட்ச ரூபாய்க்குள் தனது மகள் திருமணத்தை நடத்தி முடித்தாரா? அவரிடம் இருந்த ரூபாய் நோட்டுக்கள் எப்படி மாற்றப்பட்டன என்று பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.