ஐ.நா., சபையின் அமைதிக்கான தூதுவராக மலாலா யூசுப்சாய் நியமிக்கப்பட்டுள்ளார். மிக இளைய வயதில் இந்த பதவியை பெரும் அவருக்கு தற்போது 19 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானை சேர்ந்த சிறுமியான மலாலா, தலிபான்களின் கொடுமைகளுக்கு எதிராக உரக்கக் குரல் கொடுத்து, சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்தவர் ஆவார். இதற்காக, தலிபான்கள் இவரை சுட்டுக் கொல்லவும் முயற்சித்தனர்.
எனினும், அந்த முயற்சியில் மலாலா உயிர் பிழைத்து, தொடர்ந்து பெண் சமூக விடுதலைக்கான செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறார். அவரது செயல்பாடுகளை பாராட்டி, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.