பிரான்ஸ் நாட்டில் ராணுவ வீரர்கள் மீது கார் ஏற்றி கொல்ல முயன்ற ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
பிரான்ஸ் நாட்டின் ராணுவ முகாமில் இருந்து இன்று காலை வெளியில் வந்த ராணுவ வாகனம் ஒன்றின் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியது. இந்த சம்பவத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து வேண்டும் என்றே நிகழ்த்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து அந்த மர்மநபரை போலீஸார் மடக்கி பிடித்ததனர். அவன் தப்ப முயன்ற போது துபாக்கியால் சுட்டு அவனை கைது செய்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.