திருநெல்வேலி:
சாகித்ய அகெதமி விருது பெற்றுள்ள எழுத்தாளர் வண்ணதாசன் நேர்காணல் நிகழ்ச்சி அகில இந்திய வானொலியில் வியாழக்கிழமை ஒலிபரப்பாகிறது.
திருநெல்வேலி அகில இந்திய வானொலி நிலையத்தின் இயக்குநர் மு. கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலியை சேர்ந்த எழுத்தாளர் வண்ணதாசனுக்கு அண்மையில் 2016 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகெதமி விருது அறிவிக்கப்பட்டது.
விருது பெற்றுள்ள வண்ணதாசனுடனான நேர்காணல் நிகழ்ச்சி திருநெல்வேலி அகில இந்திய வானொலியில் வியாழக்கிழமை (ஜன. 12) காலை 10 மணிக்கு முதல் அலைவரிசையில் (1197 கிலோ ஹெட்ஸ் 250.6 மீட்டர்) ஒலிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியினை தமிழ்நாடு, புதுச்சேரியின் அனைத்து வானொலி நிலையங்களும் ஒலிபரப்பக் கேட்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.