ஈரான் அதிபர் தேர்தலில் ஹஸன் ரோஹானி வெற்றி பெற்றுள்ளார். ஈரான் அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த சனிக்கிழமை நடந்தது.
தேர்தலில் பதிவான வாக்குகளில் 38.9 மில்லியன், அதாவது 59 சதவீத வாக்குகள் பெற்று, பழமைவாத கட்சியை சேர்ந்த இப்ராஹிம் ரைசியை அவர் வீழ்த்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஹஸன் ரோஹானி இரண்டாவது முறையாக ஈரான் அதிபராவது குறிப்பிடத்தக்கது.