இந்தியாவில் இஸ்லாமிய வங்கிக்கு அனுமதியில்லை: இந்திய ரிசர்வ் வங்கி
புதுதில்லி: இந்தியாவில் இஸ்லாமிய வங்கி துவங்குவதற்கான அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனை செய்வதில்லை என தீர்மானத்திருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி அளித்த பதிலில், பரந்து விரிந்த அளவிலும், நாட்டில் அனைவருக்கும் வங்கி மற்றும் நிதி சேவையை பெறுவதில் சமவாய்ப்பு இருப்பதை கருத்தில் கொண்டு, இஸ்லாமிய வங்கி துவங்கும் திட்டம் துவங்குவதற்கான அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனை செய்வதில்லை என இந்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியும் தீர்மானத்திருப்பதாக அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய அல்லது ஷரியா வங்கியானது இஸ்லாமியத்தின் வழக்கப்படி வட்டி வசூலிக்காமல் கடன் வழங்கும் கொள்கைகளின் அடிப்படையிலான விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட நிதி அமைப்பாகும். இந்த வங்கிகளை அறிமுகப்படுத்துவது தொடர்பாக ரிசர்வ் வங்கி ஏற்கனவே ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவித்துள்ளது.