கரூர்: மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா இல்லத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனைக்கு மக்களவை துணை சபாநாயகரும் கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினருமான தம்பிதுரை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கரூரில் செய்தியாளர்களிடம் தம்பிதுரை பேசியதாவது:
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா இல்லம் புனிதமானது. ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் ஏற்று கொள்ளதக்கது அல்ல என்றார்.
மேலும் ஜெயலலிதா இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனை குறித்து முதல்வர் பழனிசாமியிடம் பேச உள்ளதாகவும் அதன்பின்னர் முழுமையான விவரங்களை தெரிவிப்பதாக தம்பிதுரை கூறினார்.