புதுதில்லி: வடமாநிலங்களில் இன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் குரேஸ் பள்ளத்தாக்கு பகுதியில் தீபாவளி கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டுள்ளார்.
இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், லெப்டினன்ட் ஜெனரல் தேவராஜ் அம்பு மற்றும் சினார் கார்ப்ஸ் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஜே.எஸ். சந்து ஆகியோரும் குரேஸில் பிரதமருடன் கலந்துகொண்டனர்.
கடந்த 2014-ம் ஆண்டு காஷ்மீரில் வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்ட பேரழிவுக்குப் பிறகு காஷ்மீர் மக்களோடு மோடி தீபாவளி கொண்டாடியது நினைவுகூரத்தக்கது.