தணிக்கை செய்யப்பட்ட படத்தை மீண்டும் தணிக்கை செய்ய வலியுறுத்துவதில் உடன்பாடு இல்லை என்று நடிகர் பிரபு கூறியுள்ளார்.
மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள ஜி.எஸ்.டி. வரி பற்றிய வசனத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஜி.எஸ்.டி. வசனத்தை நீக்க வேண்டும் என்று பா.ஜனதா கட்சியினர் வற்புறுத்தி உள்ளனர். இந்நிலையில்
மெர்சல் படத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி மற்றும் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் ட்விட்டர் வழியே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேலும் நடிகர்கள் பலரும் ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இதற்கிடையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் பிரபு செய்தியார்களிடம் பேசும் போது தணிக்கை செய்யப்பட்ட படத்தை மீண்டும் தணிக்கை செய்ய வலியுறுத்துவதில் உடன்பாடு இல்லை தணிக்கை செய்து வெளியான படத்தில், காட்சிகளை நீக்குவது முறையுமல்ல. கருத்து சுதந்திரம் என்பது வேண்டும் என்றும் கூறியுள்ளார்.