தமிழகத்தில் அதிமுகவின் இரு அணிகளைச் சார்ந்து வளரும் நிலையில் பாஜக இல்லை: நிர்மலா சீதாராமன்

தமிழகத்தில் அதிமுகவின் இரு அணிகளைச் சார்ந்து வளரும் நிலையில் பாஜக இல்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
தமிழகத்தில் அதிமுகவின் இரு அணிகளைச் சார்ந்து வளரும் நிலையில் பாஜக இல்லை: நிர்மலா சீதாராமன்

சென்னை: தமிழகத்தில் அதிமுகவின் இரு அணிகளைச் சார்ந்து வளரும் நிலையில் பாஜக இல்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் கூறியதாவது:- 

அதிமுகவின் ஒரு அணியை மட்டும் பலப்படுத்தி, தமிழகத்தில் கொல்லைப்புறம் வழியாக ஆட்சியில் இடம்பிடிக்க முயற்சிக்கிறது என்று தமிழகக் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியது பற்றி கேட்ட போது “தமிழகத்தில் அதிமுகவின் இரு அணிகளைச் சார்ந்து வளரும் நிலையில் பாஜக இல்லை” என்று கூறினார்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், தமிழகத்தில் பாஜக இந்தி திணிப்புக்கு முயல்வதாக திர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து பேசிய அவர், "காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோது இந்தி பற்றி ஸ்டாலின் ஏன் கேட்கவில்லை. தமிழகத்தில் இந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை" என்று கேள்வி எழுப்பினார்.

கொடநாடு கொலை வழக்கு போன்ற விவகராங்களில் தமிழக அரசு சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றும் டிடிவி தினகரன் கைதுசெய்யப்பட்டதற்கும் பாஜகவுக்கும் எந்தத் சம்பந்தமும் கிடையாது என்றும அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com