காவல் துறையினரை தாக்கியது மன்னிக்க முடியாத குற்றம் என நடிகர் ரஜினி கூறினார். அமெரிக்கா செல்லும் முன் நடிகர் ரஜினி தனது போய் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: -
என்னை பற்றிய அரசியல் விமர்சனம் தவிர்க்க இயலாதது. நான் கட்சி துவங்குவது உறுதி, எப்போது துவங்குவேன் என்பதை கூறமுடியாது. அது தொடர்பான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
சீருடையில் உள்ள போலீசாரை தாக்குவது என்பது மன்னிக்க முடியாத குற்றம். நிர்மலா தேவி விவகாரம் அரசு சம்பந்தப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் நிர்மலா தேவிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தியை நான் சந்தித்தது வழக்கமான ஒன்று தான். அவர் எனது நீண்ட கால நண்பர். எஸ்.வி. சேகர் விவகாரத்தில் அவர் பதிவிட்டது தவறானது, கண்டிக்கத்தக்கது. என்று கூறினார்.