கும்பக்கோணம்: கும்பக்கோணம் ஆதி கும்பேசுவரன் கோயிலில் எரிவாயு சிலிண்டர் கசிந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கோவில்களில் திடீர் திடீரென தீ பிடிக்கும் சம்பவங்கள் தொடருகின்றன.
மதுரை மீனாட்சி அம்மன் கிழக்கு கோபுரம் பகுதியில் கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பல நூற்றாண்டுகால மண்டபம் நாசமானது. இதையடுத்து திருவாலங்காடு கோவில் ஸ்தல விருட்சமான ஆலமரம் பற்றி எரிந்தது.
தற்போது கும்பக்கோணம் ஆதி கும்பேசுவரன் கோயிலில் எரிவாயு சிலிண்டர் கசிந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து கோவில்களில் மட்டும் தீ விபத்து ஏற்படுவது ஏன் என்ற பெருத்த சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்துள்ளதோடு இது எதற்கான அறிகுறி என்ற பெரும் அச்சமும் ஏற்பட்டுள்ளது .