தற்போதைய செய்திகள்
பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு நாட்டின் மிகப்பெரிய ஊழல்: புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி
பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு நாட்டின் மிகப்பெரிய ஊழல் என்று புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி கூறியுள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு நாட்டின் மிகப்பெரிய ஊழல் என்று புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி கூறியுள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11000 கோடி முறைகேடு நடந்ததாக வங்கி நிர்வாகமே பங்குச் சந்தைக்கு (பிஎஸ்இ) அறிக்கையில் அனுப்பியுள்ளது. இந்த மோசடி குறித்து கடந்த 10 நாட்களுக்கு முன்னர் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த வங்கி முறைகேடு தொடர்பாக பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இது நாட்டின் மிகப்பெரிய ஊழல் என்றும் மத்திய அரசு விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்த வேண்டும் எனவும் புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி தெரிவித்துள்ளார்.