தமிழகத்தில் 6 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுளது. இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தவின்படி
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக பிரசாந்த் எம். வடநேரே நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை ஆட்சியர் மலர்விழி தர்மபுரி மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்ட ஆட்சியராக விஜயலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.
தேனி மாவட்ட தலைவராக மரியம் பல்லவி பால்தேவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்ட ஆட்சி தலைவராக டி.அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார். மீன் வளத்துறை இயக்குனராக இருந்த தண்டபாணி கடலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதுபோல் ஆளுநரின் துணைசெயலராக இருந்த டி.மோகன் ஐ.ஏ.எஸ்-க்கு புதிய பணி வழங்கப்பட்டுள்ளது. காத்திருப்போர் பட்டியலில் இருந்த மோகன் பொதுப்பணித்துறை துணைசெயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.