சென்னை: நெடுந்தீவு அருகே மீன்பிடித்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேருக்கு ஜனவரி 18ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் அவர்களையும் சேர்த்து,
இலங்கை சிறையில் உள்ள 84 தமிழக மீனவர்கள், 159 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.