சென்னை: காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்த்தனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இலவச வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஜெயலலிதாவின் பெயரால் நடைபெறும் அரசு தமிழகத்தின் உரிமைகளை பாதுகாத்து வருவதாகவும், நீதிமன்றத்தில் தகுந்த வாதங்களை முன்வைத்து தமிழத்தின் உரிமை பாதுகாக்கப்படும் என்று ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.