உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முன் கோயில் காளைகளுக்கு மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து மாடுபிடிவீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
8 காளைகளை பிடித்த 681ஆம் எண் கொண்ட மாடுபிடி வீரர் அஜய் முதல் பரிசாக காரை வென்றார்.
2வது இடத்தை 6 காளைகளை பிடித்த 670ஆம் ஆண் வீரர் மற்றும் 214ஆம் எண் வீரருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
3வது இடத்தை 11ஆம் எண் வீரர் வென்றார். மேலும் சிறப்பாக காளையை பராமரித்த மதுரையை சேர்ந்த சந்தோஷுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.