காரை பரிசாக வென்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு வீரர்

உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். 
காரை பரிசாக வென்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு வீரர்

உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று  கொடியசைத்து துவக்கி வைத்தனர். 

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முன் கோயில் காளைகளுக்கு மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து மாடுபிடிவீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

8 காளைகளை பிடித்த 681ஆம் எண் கொண்ட மாடுபிடி வீரர் அஜய் முதல் பரிசாக காரை வென்றார்.

2வது இடத்தை 6 காளைகளை பிடித்த 670ஆம் ஆண் வீரர் மற்றும் 214ஆம் எண் வீரருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

3வது இடத்தை 11ஆம் எண் வீரர் வென்றார். மேலும் சிறப்பாக காளையை பராமரித்த மதுரையை சேர்ந்த சந்தோஷுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com