நெல்லை மாவட்டம் செங்கோட்டை, தென்காசிக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
விஷ்வ ஹிந்து பரிசத் ரத யாத்திரை கேரளாவில் இருந்து நெல்லை மாவட்டம் வழியாக தமிழகத்துக்கு வருகிறது. விஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரையை தமிழகத்திற்குள் நுழைய அனுமதி அளித்துள்ள அதிமுக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பொது அமைத்திக்கு பங்கம் விளைவிக்கும் திட்டமிட்ட நடவடிக்கையே விஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரை என்று அவர் கூறியுள்ளார். இந்நிலையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் செங்கோட்டை, தென்காசிக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.