திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் கோலாம்பூரிலிருந்து வந்த பயணியிடம் நடத்தப்பட்ட சோதனையில் மதுரையை சேர்ந்த பயணியிடம் ரூ.3.35 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோலாம்பூரிலிருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவினர் சோதனையிட்டபோது, மதுரையை சேர்ந்த மீரா மொய்தீன் என்ற பயணி கொண்டு வந்த உடமைகளில் முறையாக சுங்கம் செலுத்தாத ரூ 3.35 லட்சம் மதிப்புள்ள 108 கிராம் தங்கம் நகைகள் இருந்தன. இந்த நகைகளை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்து மீரா மொய்தீனிடம் விசாரித்து வருகின்றனர்.