தற்போதைய செய்திகள்
ஆளுநரிடம் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை அளித்துள்ளோம்: குமாரசாமி
கர்நாடகாவில் ஆட்சியமைக்க உரிமை கோரி, குமாரசாமி, ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்தார்.
கர்நாடகாவில் ஆட்சியமைக்க உரிமை கோரி, குமாரசாமி, ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்தார். காங். மாநில தலைவர் பரமேஸ்வரா, சிவக்குமார் ஆகியோரும் இந்த சந்திப்பின் போது உடன் இருந்தனர்.
பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தனர். அப்போது அவர் நாங்கள் போதுமான ஆவணங்களை ஆளுநரிடம் கொடுத்துள்ளோம். மேலும் 117 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்களை நாங்கள் சமர்ப்பித்திருக்கிறோம். சட்ட நிபுணர்களுடன் ஆலோசிப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் அரசியலமைப்பின் படி எங்களை ஆட்சி அமைக்க அழைப்பார் என்று நம்புகிறோம். காங்கிரஸ் - மஜத கூட்டணி ஒருமித்த எண்ணத்துடன் திடமாக உள்ளது என்றும் கூறினார்.
மேலும் சுயேட்சை எம்எல்ஏ காங்கிரஸ்-மஜத கூட்டணியை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர். என்று பரமேஸ்வரா கூறியுள்ளார்