தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் மீனவ பிரதிநிதிகளுடன் ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 65 பேரை விடுதலை செய்ய தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட மேலும் 74 பேரை விடுவிக்க இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுவரை 139 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்புவது தொடர்பாக மீனவ பிரதிநிதிகளுடன் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.