உளுந்தூர்பேட்டை அருகே இன்று அதிகாலை பஸ்ஸும் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் இரண்டு பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை, எடைக்கல் அருகே இந்த விபத்து நேர்ந்தது. விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இந்த விபத்து காரணமா, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.