சென்னை: சுதந்திர தினத்தையொட்டி, வரும் புதன்கிழமை (ஆக.15) சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட மதுக் கடைகள், மதுக் கூடங்கள் அனைத்தும் மூடப்படும் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சுதந்திர தினத்தையொட்டி, வரும் புதன்கிழமை (ஆக.15) சென்னை மாவட்டத்தில் உள்ள மதுக் கடைகள், அதைச் சாா்ந்த மதுக் கூடங்கள் அனைத்தும் மூடப்படும். அதேபோல், உணவகங்களுடன் கூடிய மதுக் கூடங்கள், கிளப்புகளுடன் கூடிய மதுக் கூடங்கள் அனைத்தும் அன்றைய தினம் மூடப்பட வேண்டும். இதை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோா் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.