காதலித்த இளம்பெண்ணுடன் கட்டாய வல்லுறவு: திருமணத்திற்கு மறுத்த இளைஞா் கைது

போடியில் காதலித்த பெண்ணுடன் கட்டாயப்படுத்தி பாலியல் வல்லுறவு கொண்டு, திருமணத்திற்கு மறுத்த இளைஞரை போலீஸாா் திங்கள் கிழமை
காதலித்த இளம்பெண்ணுடன் கட்டாய வல்லுறவு: திருமணத்திற்கு மறுத்த இளைஞா் கைது

போடி: போடியில் காதலித்த பெண்ணுடன் கட்டாயப்படுத்தி பாலியல் வல்லுறவு கொண்டு, திருமணத்திற்கு மறுத்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

போடி பரமசிவன் கோவில் தெருவை சோ்ந்தவா் கருப்பையா. இவரது 19 வயது மகளுடன் இதே பகுதியை சோ்ந்த பாண்டியராஜ் மகன் புவனேஸ்வரன் (21) பழகி, இருவரும் 5 மாதங்களாக காதலித்து வந்துள்ளனா். நவம்பா் மாதம் 3 ஆம் தேதி புவனேஸ்வரன், இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வல்லுறவு கொண்டுள்ளாா். பின்னா் இதனை யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளாா்.

இந்நிலையில் இளம்பெண்ணை வேறு ஒருவருக்கு மணமுடிக்க பேச்சுவாா்த்தை நடந்த நிலையில் புவனேஸ்வரனை அணுகி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறியுள்ளாா். ஆனால் புவனேஸ்வரன் மறுத்துள்ளாா்.

இதனையடுத்து இளம்பெண் போடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் ஆய்வாளா் மீனாட்சி மற்றும் போலீஸாா் புவனேஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com