சென்னை: சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதிநடைபெற உள்ளது என சமதுவ மக்கள் கட்சி தலைவர் தனது செய்தி குறிப்பிலி சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இதைதொடர்ந்து அரசியல் என்பது எளிதானது அல்ல. கடந்த 22 ஆண்டுகளாக அரசியலில் இருந்து வருகிறேன். நான் வீட்டில் இருந்துவிட்டு அரசியலுக்கு வரவில்லை. ஜனவரி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளேன். மத்திய அரசின் மீது மக்களுக்கு அதிருப்தி உள்ளது. அதன் வெளிப்பாடு தான் 5 மாநில தேர்தல் முடிவுகள். மேக்கேதாட்டு அணையை கட்டக் கூடாது, அனைத்துத் தேர்தல்களிலும் சமத்துவ மக்கள் கட்சி தனித்தே போட்டியிடும் என்றார்.