சென்னை: சர்வதேச கச்சா எண்ணைய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் எண்ணைய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
இந்நிலையில் சென்னையில், பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.73 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.69.32 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
எண்ணெய் நிறுவனங்கள் முன்பு பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு இந்த நடைமுறை கடந்த 2017 ஜூன் மாதம் முதல் கைவிடப்பட்டது.
இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையிலும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது.