ராமநாதபுரம்: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழகத்தில் ஆய்வுக்குக் கூட அனுமதி வழங்கப்படாது என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் எம். மணிகண்டன் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்ட அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு வழங்கப்பட்ட 15 புதிய பேருந்துகளை ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் எம்.மணிகண்டன் இன்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார். பின்னர் அவா் செய்தியாளர்களிடம் பேசுகையில், ராமநாதபுரத்தில் கடந்த 3, 4 ஆம் தேதிகளில் ஏற்பட்ட திடீா் மின்வெட்டு குறித்து, மின்துறை அமைச்சா் தங்கமணியிடம் சீரமைக்க கோரிக்கை விடுத்தேன். இதையடுத்து மின் பாதை சீரமைப்புப் பணி முடிந்து மின்சாரம் உடனடியாக விநியோகிக்கப்பட்டது.
ராமநாதபுரம் நகரில் போதிய மின்சாரம் விநியோகம் செய்ய பட்டணம்காத்தான் பகுதியில் ரூ.11 கோடி மதிப்பில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படும்.
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆய்வு செய்யக்கூட அனுமதி வழங்கப்படமாட்டாது என்றார்.