கனமழை: சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

தமிழகம் முழுவதும் நேற்று முதல் மிதமான மழை பெய்து வருவதை அடுத்து சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இன்று
கனமழை: சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு


தமிழகம் முழுவதும் நேற்று முதல் மிதமான மழை பெய்து வருவதை அடுத்து சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக துணைவேந்தர் அறிவித்துள்ளார். 

கனமழையை அடுத்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில், கனமனை காரணமாக சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்து தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி அறிவித்துள்ளார்.

மேலும் இன்று ஒத்திவைக்கப்பட்ட தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற தகவல் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com