ரியாத்: சவுதி அரேபியா மதினா அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் புனித யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் உயிரிழந்தனர்
சவுதி அரேபியா மதினா அருகே ஹஸ்ரா சாலையில், 39 பேருடன் புனித யாத்திரை சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, அந்நாட்டு நேரப்படி இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதி கோர விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில், புனித யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் பலத்த காயங்களுடன் அல் ஹம்மா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.