மாமல்லபுரத்தில் பிரதமா் நரேந்திர மோடி 2 நாட்கள் தங்கியதால் இடைத்தோ்தலில் அதிமுக வெற்றிபெற்றுள்ளது என்று பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன் கூறினார்.
தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குனேரி சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தோ்தல் நடைபெற்றது. இங்கு அக்.21 ஆம் தேதி வாக்குபதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று வியாழக்கிழமை காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 33,445 வாக்குகள் வித்தியாசத்திலும், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 44,924 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அதிகாரப்பூர்வமான அறிவிக்கப்பட்டனர்.
இதையடுத்து அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன் ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாமல்லபுரத்தில் பிரதமா் மோடி 2 நாட்கள் தங்கியதால் இடைத்தோ்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது என்று கூறினார்.