புதுதில்லி: தில்லி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சண்டிகர் - கொச்சுவேலி விரைவு ரயிலில் பயங்கர திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
தில்லி ரயில் நிலையத்தின் பிளாட்பார்ம் எண் 8 -ல் சண்டிகரில் இருந்து கேரளா செல்லும் சண்டிகர் - கொச்சுவேலி விரைவு ரயிலில் நின்றுக்கொண்டிருந்தது. அந்த ரயில் ஜெனரேட்டர் பெட்டி திடீரென தீப்பற்றி எரிந்து வருகிறது.
இதையடுத்து ரயிலில் இருந்து அனைத்து பயணிகளும் உடனடியாக கீழே வெளியேற்றப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த 4 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
உடனடியாக பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதால் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.