புதுதில்லி: அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.7 ஆக பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக சில வீடுகளில் அதிர்வுகள் காணப்பட்டதாகவும், எனினும், யாருக்கும் காயம் ஏற்பட்டதாகவோ, பெரிய அளவில் பொருள் சோதம் ஏற்பட்டதாகவோ உடனடி தகவல் இல்லை. இதுகுறித்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.