திருச்சியில் ரூ. 12.99 லட்சம் கடத்தல் தங்க நகைகள் பறிமுதல்

மலேசியாவிலிருந்து முறைகேடாகக் கொண்டு வரப்பட்ட ரூ. 12. 99 லட்சம் தங்க நகைகளை திருச்சி விமான நிலையத்தில்  ஞாயிற்றுக்கிழமை
திருச்சியில் ரூ. 12.99 லட்சம் கடத்தல் தங்க நகைகள் பறிமுதல்


திருச்சி:  மலேசியாவிலிருந்து முறைகேடாகக் கொண்டு வரப்பட்ட ரூ. 12. 99 லட்சம் தங்க நகைகளை திருச்சி விமான நிலையத்தில்  ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சிக்கு மலிண்டோ விமானத்தில் வந்த பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் சுங்கத் துறை வான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது முத்துராமன் பாண்டியன், சி. ராமசாமி செல்வம், தமிழ்செல்வன் சுடலைமுத்து, முருகன் முனியன் ஆகிய மலேசியக் குடியுரிமை பெற்ற 4 பயணிகளும் 363 கிராம் எடையில் ரூ. 12.99 லட்சம் மதிப்புள்ள நகைகளை  தங்கள் உடமைகளுக்குள் மறைத்துக் கொண்டு வந்திருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து நகைகளைப் பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com