வரும் 25-ம் தேதி திமுக இளைஞர் அணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் கூட்டம்: உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞர் அணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் கூட்டம், துணை அமைப்பாளர்கள் கூட்டம் வரும் 25 ஆம் தேதி நடைபெறும் என
வரும் 25-ம் தேதி திமுக இளைஞர் அணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் கூட்டம்: உதயநிதி ஸ்டாலின்

சென்னை: திமுக இளைஞர் அணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் கூட்டம், துணை அமைப்பாளர்கள் கூட்டம் வரும் 25 ஆம் தேதி நடைபெறும் என இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. இளைஞர் அணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கூட்டம், வருகிற 25-8-2019 ஞாயிற்றுக்கிழமை, காலை 10.00 மணியளவில், சென்னை, கிண்டி 100 அடி சாலையில் உள்ள இல்டன் ஓட்டலில் இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் ஆர்.டி.சேகர், ப.தாயகம் கவி, அசன் முகமது ஜின்னா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பைந்தமிழ் பாரி, எஸ்.ஜோயல்,ஆ.துரை ஆகியோர் முன்னிலையில் நடைபெறும்.

அதுபோது மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் - துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com