அதிமுக அரசுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராக உள்ளனர்: மு. க. ஸ்டாலின் பேட்டி

அள்ளித் தெளித்த அவசர கோலத்தில் தேர்தலை நடத்த துடிக்கும் அதிமுக அரசுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராக உள்ளனர் என்று திமுக
திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்


சென்னை: அள்ளித் தெளித்த அவசர கோலத்தில் தேர்தலை நடத்த துடிக்கும் அதிமுக அரசுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராக உள்ளனர் என்று திமுக தலைவர் மு. க. ஸ்டாலின்  தெரிவித்தார்.

தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில், திமுகவுக்கு உச்சநீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில்,  திமுக தலைவர் ஸ்டாலின் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,   உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் மரண அடி வாங்கியது அதிமுக தான். திமுகவின் ஜனநாயகம் காக்கும் பணியை உச்சநீதிமன்றம் பாராட்டவே செய்தது என்றார்.

மேலும், அள்ளித் தெளித்த அவசர கோலத்தில் தேர்தலை நடத்த துடிக்கும் அதிமுக அரசுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராக உள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி வாய்ப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுள்ளவர்களை திமுக வேட்பாளர்களாக களமிறக்க வேண்டும் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com