மசாஜ் சென்டர் பெயரில் தொழில் அதிபரிடம் ஆசைகாட்டி ரூ. 5 லட்சத்தை பறித்த  3 பேர் கைது

மசாஜ் சென்டர் பெயரில் தொழில் அதிபரிடம் ஆசைகாட்டி அடித்து உதைத்து நிர்வாணமாக படம் எடுத்து மிரட்டி ரூ.5 லட்சம் பறித்த மசாஜ் சென்டர்
மசாஜ் சென்டர் பெயரில் தொழில் அதிபரிடம் ஆசைகாட்டி அடித்து உதைத்து நிர்வாணமாக படம் எடுத்து மிரட்டிய மசாஜ் சென்டர் உரிமையாளர்  உட்பட 3 பேர்  கைது.
மசாஜ் சென்டர் பெயரில் தொழில் அதிபரிடம் ஆசைகாட்டி அடித்து உதைத்து நிர்வாணமாக படம் எடுத்து மிரட்டிய மசாஜ் சென்டர் உரிமையாளர் உட்பட 3 பேர் கைது.

மசாஜ் சென்டர் பெயரில் தொழில் அதிபரிடம் ஆசைகாட்டி அடித்து உதைத்து நிர்வாணமாக படம் எடுத்து மிரட்டி ரூ.5 லட்சம் பறித்த மசாஜ் சென்டர் உரிமையாளர்  உட்பட 3 பேரை போலீஸார்  கைது செய்துள்ளனர். 

புதுச்சேரி திருமுடி சேதுராமன் நகர் ஆரோக்கிய அம்மாள் கார்டன் இரண்டாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மஞ்சுநாத்(63) தொழிலதிபர். இவருக்கும் லாஸ்பேட்டை ஈ.சி.ஆர். லதா ஸ்டீல் ஹவுஸ் பகுதியில் பியூட்டி பார்லர் நடத்திவரும் தட்டாஞ்சாவடி வீமன் நகரைச் சேர்ந்த ராஜேஸ்(எ) உதயகுமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. 

இந்தநிலையில் ராஜேஸ் தனது நண்பர் கார்த்திகேயனும்  சேர்ந்து  மஞ்சுநாத்தை முதலியார்பேட்டை ஜானசம்மந்தம் பகுதியில் ஒருவீட்டிற்கு வரவழைத்து மஞ்சுநாத்தை தாக்கி அவரது செல்போன், கைகடிகாரம், ரூ.10 ஆயிரம் பணத்தை பறித்தனர். 

மேலும் அவரது வங்கி கணக்கிலிருந்து தங்களது 2 கணக்கிற்கு தலா ரூ.2.50 லட்சம் என 5 லட்சத்தை மஞ்சுநாத் செல்போன் மூலம் மாற்றினர். பின்னர், அவரை அடித்து விரட்டினர். 

இதையடுத்து அவர் முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மசாஜ் சென்டர் நடத்திய ராஜேஷ்-பிரேமா தம்பதியர் மஞ்சுநாத்தை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியுள்ளனர்.

முதலியால்பேட்டையில் புதிதாக துவங்கியுள்ள மசாஜ் சென்டரில் பெண்கள் இருப்பதாக கூறி அழைத்துள்ளனர். இதனை நம்பி வந்த மஞ்சுநாத்தை அடித்து உதைத்து நிர்வாணமாக படம் எடுத்து மிரட்டி பணத்தை பறித்துள்ளனர்.

தலைமறைவான 3  பேரும் சேலத்தில் விடுதியில் தங்கி இருப்பதை கண்டுபிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பணம், செல்போன் மற்றும் இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
புகார் கொடுத்த 48 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக காவல் கண்காணிப்பாளர் ஜிந்தா கோதண்டராவ் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com