காஷ்மீரில் பேருந்து பள்ளத்தில் விழுந்து கோர விபத்து: 33 பேர் பலி

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த பயணிகளில்
காஷ்மீரில் பேருந்து பள்ளத்தில் விழுந்து கோர விபத்து: 33 பேர் பலி


ஜம்மு- காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த பயணிகளில் 33 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கிஸ்த்வார் மாவட்டம் கேஷ்வன் என்ற இடத்தில் இருந்து கிஷ்த்வாருக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற மினி பேருந்து கிஷ்த்வார் அருகே சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து நிலைதடுமாறி பெரும் பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த பயணிகளில் 33 பேர் உயிரிழந்ததாகவும், 22 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

பயணிகள் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த தகவல் அறிந்து அருகில் இருந்தவர்கள் ஒடி வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மற்றும் அதிகாரிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com