இந்தோனேசியாவில் நேரிட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள், வீடுகள் பலமாக குலுங்கின. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் வடகிழக்கில் உள்ள சுலவேசி தீவுக் கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இன்று பூமிக்கடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவுகோலில் 6.9 புள்ளியாக பதிவாகி உள்ளன என இந்தோனேசிய புவி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.
கடந்த 2018ஆம் ஆண்டில் சுலேவேசி தீவில் உள்ள பலு பகுதியில் 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேரிட்டது. இதைத் தொடர்ந்து, அப்பகுதியை சுனாமி அலைகள் தாக்கின. இந்த இயற்கை சீற்றத்தில் சுமார் 2,200 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 2004ஆம் ஆண்டில் ஆசக் மாகாணத்தில் 9.1 ரிக்டர் அளவில் பூகம்பம் தாக்கியது. இதையடுத்து கடலில் மிகப்பெரிய சுனாமி அலைகள் உருவாகி, இந்தோனேசியாவை தாக்கின. இதில் சுமார் 1,70,000 பேர் மரணித்தனர்.