சென்னை: காணாமல் போன காலக்கட்டத்தில் எங்கிருந்தார் என்ற தகவல்களை கேட்ட போது முகிலன் பதிலளிக்க மறுத்து விட்டதாக சிபிசிஐடி செய்திக்குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிசிஐடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், காணாமல் போன காலக்கட்டத்தில்,எங்கிருந்தார் என்பது குறித்து கேட்டபோது முகிலன் பதில் அளிக்க மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும், விசாரணைக்கு பின்னா் முகிலன், எழும்பூா் சென்னை பெருநகர இரண்டாவது நீதித்துறை நடுவா் மன்றத்தில் ஆஜர்படுத்துவற்காக போலீஸார் அழைத்துச் சென்றனர் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், சிபிசிஐடி விசாரணைக்குப் பின் மருத்துவ பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட முகிலன், மருத்துவ பரிசோதனைக்கு பின் ராயபுரத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின் துரை இல்லத்தில் ஆஜர்படுத்த முகிலனை பாதுகாப்புடன் சிபிசிஐடி அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.