நீலகிரியில் கனமழை: கூடலூர், பந்தலூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

நீலகிரி மாவட்டம், கூடலூர், பந்தலூர் பகுதியில் கனமழை பெய்துவருவதையொட்டி கூடலூர் மற்றும் பந்தலூரில் பள்ளிகளுக்கு மட்டும்
நீலகிரியில் கனமழை: கூடலூர், பந்தலூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை


நீலகிரி மாவட்டம், கூடலூர், பந்தலூர் பகுதியில் கனமழை பெய்துவருவதையொட்டி கூடலூர் மற்றும் பந்தலூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியிலிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை முதல் தூறல் மழை பெய்யத் தொடங்யது. வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை சற்றே தாமதமாகத் தொடங்கியிருந்தாலும், மழையால் அனைத்துத் தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளதை அடுத்து, உதகையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் திங்கள்கிழமை பருவ மழை முன்னேற்பாடுகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு பருவ மழைக் காலத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கூடலூர், மற்றும் பந்தலூர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கூடலூர் மற்றும் பந்தலூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com