பிஜப்பூர்: சத்தீஸ்கரில் இரண்டு வேன்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம் நெல்சனார் காவல்நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு 2 பிக்-அப் வேன்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், அந்த வாகனங்களில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.