புதுதில்லி: இந்திய கடலோர காவல்படையின் புதிய இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்திய கடலோர காவல்படையின் புதிய இயக்குனராக நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஜூலை 1 முதல் பதவியில் தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, அவர் மும்பை மேற்கு பிராந்திய கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வருகிறார்.