ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம், ட்ரால் வனப் பகுதியில் தீவிரவாகதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்மந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்ததை பார்த்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதை அடுத்து பயங்கரவாதிகளும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.