சென்னை: சிங்கப்பூரிலிருந்து லண்டனுக்கு 327 பயணிகளுடன் சென்ற பிரிட்டீஷ் ஏா்வேஸ் விமானத்தில் பெண் பயணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னையில் நள்ளிரவில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இங்கிலாந்தை சேர்ந்த பயணி ரோனா கிளமெண்டுக்கு விமான நிலைய மருத்துவக்குழுவினா் முதலுதவி வழங்கி, பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
அதனை தொடர்ந்து விமானம் இன்று காலை லண்டன் புறப்பட்டு சென்றது.