2018 ஆம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதம் நடைபெற்ற பொறியியல் படிப்புகளின் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் தங்களுடன் இணைந்துள்ள பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விகிதங்களை வெளியிட்டுள்ளது. இதில், தமிழகம் முழுவதும் 481 பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தேர்வுகளை எழுதினர்.
தமிழகம் முழுவதும் 481 பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தேர்வுகளை எழுதினர். இதில் 6 கல்லூரிகளில் இருந்து தேர்வு எழுதிய 682 மாணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 74 பொறியியல் கல்லூரிகளில் ஒற்றை இலக்க விகிதத்தில் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 150 கல்லூரிகள் 50 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், நவம்பர் மாத தேர்வு முடிவுகளில் தரமான கல்லூரிகள் என சான்றளிக்கப்பட்ட 59 கல்லூரிகள் மட்டுமே 50 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மிகவும் தரமான கல்லூரிகள் என வகைப்படுத்தப்பட்ட கல்லூரிகளில் மட்டும் 85.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
482 பொறியியல் கல்லூரிகளில் 422 கல்லூரிகள் 50 சதவீதத்திற்கும் கீழ் தேர்ச்சி பெற்றுள்ளன. 177 கல்லூரிகளில் 50 - 25 சதவீதத்திற்கும் இடைப்பட்ட தேர்ச்சியை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட தேர்வு முடிவுகள் தமிழகத்தில் பொறியியல் கல்வியை சீரமைக்க வேண்டியதன் அவசியத்தையும், அவசரத்தையும் எடுத்துக்காட்டுவதாக உள்ளது.