நிகோபார் தீவுகளில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பீதி நிலவுகிறது.
நிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை 2.04 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள், வீடுகள் லேசாக குலுங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. சுனாமி முன்னெச்சரிக்கையும் வெளியிடப்படவில்லை.