நாங்கள் யாருடனும் தொடர்பு கொள்ளவில்லை: அஜித் பவார்

நாங்கள் யாருடனும் தொடர்பு கொள்ளவில்லை. எதிர்க்கட்சியாக அமருவதற்கு எங்களுக்கு ஆணை கிடைத்துள்ளது, அதற்கு நாங்கள் தயாராக
நாங்கள் யாருடனும் தொடர்பு கொள்ளவில்லை: அஜித் பவார்



நாக்பூர்: நாங்கள் யாருடனும் தொடர்பு கொள்ளவில்லை. எதிர்க்கட்சியாக அமருவதற்கு எங்களுக்கு ஆணை கிடைத்துள்ளது, அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என முன்னாள் மராட்டிய துணை முதல்வர் அஜித் பவார் கூறினார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்துக்கு பின்னர் முன்னாள் மராட்டிய துணை முதல்வர் அஜித் பவார் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாங்கள் யாருடனும் தொடர்பு கொள்ளவில்லை. எதிர்க்கட்சியில் அமருவதற்கு எங்களுக்கு ஆணை கிடைத்துள்ளது, அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.  

மேலும், பருவந்தவறிய மழையால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் ஒன்றிணைந்து அரசை உருவாக்க வேண்டும். 

இந்த மழை பாதிப்பிற்காக விவசாயிகளுக்கு அறிவித்த உடனடி உதவி தொகையான ரூ.10 ஆயிரம் கோடி என்பது போதியது இல்லை என்றும் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com