ஹோட்டல் அதிகாரிக்கு கொலை மிரட்டல்: நடிகை மீரா மிதுன் மீது போலீஸார் வழக்குப்பதிவு

சென்னை எழும்பூரில் ஹோட்டல் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகை மீரா மிதுன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
meera mithun
meera mithun


சென்னை எழும்பூரில் ஹோட்டல் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகை மீரா மிதுன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான நடிகை மீரா மிதுன், சக போட்டியாளர்களுடன் நடந்துகொண்ட விதம் நிகழ்ச்சியில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.  நிகழ்ச்சிக்கு பின்னர் மீரா மிதுன் மிரட்டல் ஆடியோக்கள் அதிகமாக பேசப்பட்டது. 

சமீபத்தில் அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மும்பையில் பாதுகாப்பாக உணர்வதால் அங்கு வசிப்பதாகவும், தமிழகத்தில் போதிய பாதுகாப்பு இல்லை என கூறியதுடன், தமிழக போலீஸார் மீது பல விமர்சனங்களையும் முன்வைத்தார். 

இந்நிலையில், சென்னை எழுப்பூரில் உள்ள ஒரு ஹோட்டல் அதிகாரி அருணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகை மீரா மிதுன் மீது புகார் அளிக்கப்பட்டது. 

இதையடுத்து ஹோட்டல் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் நடிகை மீரா மிதுன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com